பிரபல தேசிய பாடசாலை மாணவ மாணவிகள் மீது கொடூர தாக்குதல் !
மாத்தளை - கடுவெல போமிரிய பகுதியில் உள்ள தேசிய பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த சிலர், பாடசாலைக்குள் கெடட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவ மாணவிகளை மிருகத்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நேற்று (11) பிற்பகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
பொலிசில் முறைப்பாடு
இந்த தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர், சில நாட்களுக்கு முன்பும் சில பாடசாலை குழந்தைகளை தாக்கியதாகவும் அதிபர் கூறியுள்ளார்.
இந்நிலையில் , நேற்றும் மேலும் சிலருடன் வந்து பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் பாடசாலையின் அதிபர் கூறுகிறார்.
பாடசாலையின் பழைய மாணவருடன் பாடசாலைக்குள் நுழைந்த வெளியாட்கள் இவ்வாறு மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
சிறுவர்களைத் தாக்கும் போது அவர்களைக் காப்பாற்றச் சென்ற மாணவிகளையும் பூந்தொட்டிகள், விளக்குமாறு, துடைப்பம் போன்ற பொருட்களால் தாக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக நவகமுவ பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அதிபர் தெரிவித்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.