தகாத உறவால் சகோதரியின் கணவனை கொலை செய்த சகோதரன் தப்பியோட்டம்!
அம்பாந்தோட்டை பகுதியில் சகோதரியின் கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சகோதரன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் இன்றையதினம் (23-06-2024) கட்டுவான, அமுதமன பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைக்கு தகாத உறவே காரணம் என கட்டுவான பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் சகோதரரே இவரைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கத்தியால் குத்தி கொலை செய்த நபர் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எனவும், அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.