இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரானார் அஜித்!
இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால்,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, அவர் தனது நியமனத்தை பெற்றுக்கொண்டார்.
மேற்படி நியமனக் கடிதம் பெறும் நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவும் கலந்துகொண்டிருந்தார்.
இதேவேளை பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால் இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும் சுமார் 9 மாதக் காலப்பகுதி வரையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.