லொஹானுடன் அழகி புஷ்பிகாவும் சிறைக்குச் சென்றார்; அம்பலமான தகவல்
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன் திருமதி இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா சிறைச்சாலைக்குச் சென்றதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலைக்குத் திருமதி இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா மற்றும் ஒரு குழுவினரும் சென்றதாகவும் இது தொடர்பான சி.சி.டிவி. கெமராவின் மூலம் எதிர்காலத்தில் உண்மை வெளிவரும் எனவும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.
அதோடு அரசாங்க நிறுவனத்திற்கு அல்லது ஓர் இடத்திற்குச் செல்லும் போது எவ்வாறு செல்ல வேண்டும் என்ற முறையுள்ளது. அதன்படி செல்ல வேண்டும் என்றும் எங்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டிற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்றும், ஆனால் அவர்கள் அரை காற்சட்டையுடன் சமுகமளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றத் தடுப்பு திணைக்களத்திற்கு அறிவிக்கவுள்ள்ளதாகவும் தெரிவித்த அவர் குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை லொஹானுடன் தாம் சிறைக்கு செல்லவில்லை என திருமதி இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://jvpnews.com/article/i-have-nothing-to-do-with-the-prison-incident-1631780861