சற்றுமுன்னர் விமானத்தில் மும்பைக்கு புறப்பட்டார் பசில் ராஜபக்ஷ!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.
இதனால் நாட்டில் எரிபொருள், எரிவாயு உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதோடு, விலைவாசிகளும் அதிகரித்து வருவதால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில், இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை பதவி விலகிக் கோரி கடந்த சில மாதங்களாக நாட்டு மக்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாகவும், அவ்வேளை கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்பிச் சென்றதாக தகவல் வெளியாகி இருந்தன.
இவ்வாறான ஒரு நிலையில் பசில் ராஜபக்ஷ சில நிமிடங்களுக்கு முன்பு UL 141 இல விமானத்தில் மும்பைக்கு புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.