இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்கியது பங்களாதேஷ்
2.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதன் மூலம் பங்களாதேஷ் இலங்கைக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Tareq Md Ariful Isla 2.2 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளித்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நன்கொடையில் புற்றுநோய் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு மற்றும் ஊசி மருந்துகள், வைரஸ் தடுப்பு, வலிப்பு நோய் மற்றும் ஆஸ்துமா எதிர்ப்பு உள்ளிட்ட 79 அத்தியாவசிய மருந்துகள் அடங்கும்.
இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவுவதற்கு பங்களாதேஷ் மகிழ்ச்சியடைவதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்டிற்கு உதவுவதற்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததில் பெருமிதம் கொள்வதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இலங்கைக்கு எந்த வகையிலும் உதவ முன்வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.