2 ஆயிரம் உத்தியோகபூர்வ அரச வாகனங்கள் தொடர்பில் பகீர் அறிக்கை
2 ஆயிரம் அரச உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்பில் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாகங்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக புலனாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெருமளவில் பணம் வீண் விரயம்
அத்துடன் இதனால் பெருமளவில் பணம் வீண் விரயமாகின்றமையும் புலனாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
இதேவேளை சிலர் தங்களது தனியார் வாகனங்களை தாம் பணிபுரியும் நிறுவனத்துக்கு வாடகைக்கு வழங்கி அவற்றையும் தங்களது உத்தியோகபூர்வ வாகனங்களாக பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாது அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை தங்களது மனைவிகள் மற்றும் பிள்ளைகளின் பாடசாலை பயணங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களின் ஏனைய பயணங்களுக்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பாதுகாப்புப் படையினரின் சாரதிகள் குடும்ப உறுப்பினர்களின் பயணங்களுக்கு அரசாங்கத்தினால் பிரதானிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளை பயன்படுத்துவதாலும் இந்த பண இழப்பு இரட்டிப்பு மூன்று மடங்காக அதிகரிப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.