பாபா வங்காவின் புதிய கணிப்பு ; விரைவில் அதிகரிக்க போகவுள்ள வைரஸ்
ஒரு வைரஸால் மக்களின் வயதே வேகமாக அதிகரிக்க போவதாக பல்கேரியாவின் பிரபலமான தீர்க்கதர்சியான பாபா வங்காவின் கணிப்பு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாபா வங்காவின் குறிப்புகளில் பல சம்பவங்கள் இன்றுவரை உண்மையாகி வருகின்றன.
அவற்றில் டயானாவின் மரணம், சீனாவின் எழுச்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். ஆனால், மனித இனம் எப்போது அழியும் என்பது வரையும் பாபா வங்கா கணித்துள்ளார்.
இந்த நிலையில், அவரது கணிப்பு ஒன்று வைரலாகியுள்ளது. அது வைரஸ் குறித்த கணிப்பாகும். ஒரு ஆபத்தான வைரஸ் இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு வேகமாக பரவும் என்றும், ஆபத்தானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைரஸானது மக்களின் வயதை வேகமாக அதிகரிக்குமாம். மேலும், மக்கள் விரைவில் வயதானவர்களாக காட்சியளிக்கத் தொடங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.