இலங்கைக்கு தொடர்ந்து கல்வி ஒத்துழைப்பை உறுதிப்படுத்திய அவுஸ்திரேலியா
இலங்கையின் நம்பகமான கல்விப் பங்காளி என்ற வகையில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் உறுதியளித்தனர்.
அவுஸ்திரேலியாவின் பிரஜாவுரிமை, ஒழுக்கநெறி மற்றும் பல்கலாசார அலுவல்கள் மற்றும் சர்வதேச கல்விக்கான உதவி அமைச்சருமான ஜூலியன் ஹில்லிற்கும், கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு கல்வி அமைச்சில் நடைபெற்றது.

நன்கொடை
இதன் போது, அண்மையில் முழு நாட்டையும் பாதித்த திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர், மனிதாபிமான உதவி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 3.5 மில்லியன் டொலர் நிதி உதவிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் நம்பகமான கல்விப் பங்காளி என்ற வகையில் தமது ஆதரவை அவுஸ்திரேலியா தொடர்ந்தும் வழங்கும் என அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் இதன்போது உறுதியளித்தனர்.