பிரதான பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்!
பண்டாரகம உள்ளூராட்சி சபையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மீது நால்வர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான பிரதான பாதுகாப்பு அதிகாரி சிகிச்சைக்காக பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்வதற்கான விசாரணைகள்
பண்டாரகம பொதுச் சந்தைக் கட்டிடத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி மன்ற அலுவலகத்தின் நுழைவாயிலை அடைத்து நிறுத்தப்பட்டிருந்த காரை அகற்றுமாறு பாதுகாப்பு அதிகாரி காரில் இருந்தவர்களிடம் அறிவித்துள்ளார்.
எனினும் அவர்கள் அதை அலட்சியப்படுத்தியதால், வீதி தடைப்படும் என்பதால் காரை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு பாதுகாப்பு அதிகாரி மீண்டும் அவர்களிடம் தெரிவித்தார்.
இதன்போது காரில் இருந்தவர்கள் வெளியே வந்து பாதுகாப்பு அதிகாரியை தாக்கிய பின்னர் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் காரின் பதிவு இலக்கத்தின் அடிப்படையில் தாக்குதலுக்கு உள்ளான சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.