400 டிரோன்கள் தாக்குதல் ; பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு; சினம்கொண்ட இந்தியா!
இந்தியா - பாகிஸ்தான் போருக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு துருக்கி முழு ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
400 டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல்
இந்நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்த துருக்கி டிரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களாக இந்தியா மீது சுமார் 400 டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த டிரோன்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவையாகும். துப்பாக்கி, வெடி குண்டுகளை சுமந்து சென்று இலக்கை அழிக்கும் வகையிலான அசிஸ் கார்டு சோங்கர் வகை டிரோன்களை பாகிஸ்தானுக்கு துருக்கி வழங்கியுள்ளது.
அந்த டிரோன்கள் மூலமே இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை இந்தியாவின் பஹல்காம் தாக்குதலுக்கு துருக்கி எந்தவித இரங்கலோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை.
மேலும், இக்கட்டான சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு அளிப்பதாக துருக்கி தெரிவித்துள்ளமை இந்தியாவை சினம் கொள்ள வைத்துள்ளது.
அதேவேளை பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா பதிவடி நடவடிகைகளையும் எடுத்து வருகின்றதாக கூறப்படும் நிலையில் , இருநாடுகளும் இருதரப்பு தாக்குதலை நிறுத்திவிட்டு, உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.