சைவக் கோயில் மீது தாக்குதல்! ஜேர்மனியில் சங்கிகள் ஆள் வைத்துச் செய்த அட்டகாசம்
ஜெர்மன் கயில்புறோன் கந்தசாமி கோயில் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த ஆலயத்தில்தமிழில் பூசை இடம்பெறவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு, சில தினங்களில் செந்தமிழ் குடமுழுக்கு இடம்பெற இருந்த நிலையிலேயே கோவில் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமஸ்கிருதத்திலேயே பூசை இடம்பெறவேண்டும் என்றும், நீஷபாஷயான தமிழில் கடவுளுக்கு வழியாடு இருக்கக்கூடாது என்று செயற்படும் சங்கிகளின் வேலைதான் இது என்று குற்றம் சுமத்தப்படுகின்றது.
சமஸ்கிருத வழிபாடுகளின் ஊடாக புலம்பெயர் நாடுகளில் பெரும்பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கும் சங்கிகளின் பிரதிநிதிகள், தமிழில் வழிபாட்டுகள் மேற்கொள்ளுவதை கடுமையாக எதிர்த்து வருகின்றார்கள்.
அவர்களின் தூண்டுதலின் பெயரிலேயே அந்த தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருக்கலாம் என்று ஆலய நிர்வாகத்தினர் கூறுகின்றார்கள்.
தமிழின் மீதும், தமிழ் மக்களின் நம்பிக்கையின் மீதும், ஒரு இனத்தின் உணர்வின் மீதும் தாக்குதல் நடாத்திய சங்கிகளின் பெயர் விபரங்களை எமது தளத்தில் விரைவில் வெளியிடுவோம் என்றும் இங்கு கூறிவைக்க விரும்புகின்றோம்.
குறிப்பிட்ட இந்த கந்தசாமி கோவிலில், அங்குள்ள தெய்வ விக்கிரகங்களுடன் கார்த்திகைப்பூ சுருவம் ஒன்றும் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுவருகின்மை குறிப்பிடத்தக்கது.