புதன் பெயர்ச்சியால் உருவான இரட்டை ராஜயோகங்கள் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் நவகிரகங்களில் சந்திரனுக்கு அடுத்தப்படியாக மிகவும் வேகமாக ராசியை மாற்றக்கூடியவர்.

புதன் பெயர்ச்சியால் உருவான இரட்டை ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் உருவாகியுள்ள புதாதித்ய மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகங்களால் விருச்சிக ராசிக்காரர்கள் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை தேடி வரும் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சொந்த தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் உருவாகியுள்ள புதாதித்ய மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகங்களால் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை காண்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். தாயாருடனான உறவு வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டில் உருவாகியுள்ள புதாதித்ய மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகங்களால் மீன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் திடீர் ஏற்றத்தைக் காண்பார்கள். முன்னேற்ற பாதை திறக்கப்படும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து, பரம்பரை சொத்து கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
