நாகப்பட்டினம் காங்கேசன்துறை படகு சேவைக்கான நிதி உதவி மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
காதலருடன் 2 மாதம் உல்லாசம் ; வீட்டுக்கு திரும்பி வந்து கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த மனைவி
ஓகஸ்ட் 2024-இல் இச்சேவை மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்திய அரசு வழங்கும் நிதியுதவியின் தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டு இதுவாகும்.
பிராந்திய இணைப்புத் திறனை மேம்படுத்துவதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்தியா கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நீட்டிப்பு பிரதிபலிக்கிறது என்று உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு சுமார் 300 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இந்த நிதியுதவி, ‘வியாபிலிட்டி கேப் ஃபண்டிங்’ (Viability Gap Funding – செயல்பாட்டுச் செலவு இடைவெளிக்கான நிதி) எனும் நடைமுறையின் கீழ் வழங்கப்படுகிறது.
முந்தைய ஆண்டைப் போலவே, முக்கிய தளவாட மற்றும் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டுவதன் மூலம், இச்சேவையை மலிவு விலையிலும் அதே சமயம் நிலையான செயல்பாட்டுத் திறனுடனும் பராமரிப்பதை இந்த உதவி நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஓகஸ்ட் 2024-இல் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து, இப்படக்ச் சேவை சுமார் 52,000 பயணிகள் பயணிக்க உதவியுள்ளது; இது இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக பரிமாற்றங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்வழி இணைப்பை மீண்டும் உயிர்ப்பிப்பதில் இச்சேவை ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
டிசம்பர் 2024-இல் இலங்கை அதிபரின் இந்தியப் பயணம் மற்றும் ஏப்ரல் 2025-இல் இந்தியப் பிரதமரின் இலங்கை பயணம் ஆகியவற்றின் போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட கடல்வழி இணைப்பு குறித்த கூட்டு நோக்கத்துடனும் இந்த நிதியுதவி நீட்டிப்பு ஒத்துப்போகிறது.
எதிர்காலத் திட்டங்களில், 65 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்திய மானிய உதவியின் கீழ் காங்கேசன்துறை துறைமுகத்தைச் சீரமைத்தல் மற்றும் கடல்வழி இணைப்பை மேலும் விரிவுபடுத்தி, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார மற்றும் மக்கள் இடையிலான உறவுகளை ஆழப்படுத்தக்கூடிய கூடுதல் வழித்தடங்கள் மற்றும் சேவைகளை ஆராய்தல் ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.