கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது
கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் நேற்று (03) கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் நேற்றிரவு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலியார் வீதி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் 26 வயது மதிக்கதக்க இளைஞர் என்பதும் குறிப்பிடதக்கது.
பொலிஸ் விசாரணை
மேற்படி பகுதியில் அண்மைக்காலமாக கேரளா கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபரிடமிருந்து 1 மில்லி கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் மற்றும் சான்றுப் பொருட்கள் யாவும் இன்று (04) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த கல்முனை தலைமையக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.