நாயினால் உயிரிழந்த இராணுவ சிப்பாய்
வெல்லவாய எல்ல பிரதான வீதியில் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியைக் கடக்க முயன்ற நாய் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளதுடன் அவர்களில் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தம்பகல்ல பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதான இராணுவ சிப்பாய் என தெரிய வந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதுடன் இச்சம்பவம் அருகில் உள்ள வர்த்தக நிலையம் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.