அருச்சுனா எம்.பிக்கு தலையில் பிரச்சினை ; தமிழில் பேசவேண்டாம்...நாடாளுமன்றில் சலசலப்பு

Sri Lanka Police Anuradhapura Parliament of Sri Lanka Dayasiri Jayasekara Ramanathan Archchuna
By Sulokshi Feb 05, 2025 09:26 AM GMT
Report

யாழ் மாவட்ட சுயேட்சை எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவின் தலையில் பிரச்சினை என்பதால் , அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எந நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து நாடாளுமன்றில் சலசலப்பு ஏற்பட்டது. கடந்த 29 ஆம் திகதி அநுராதபுரம் பகுதியில் வைத்து திட்டமிட்ட வகையிலேயே என்னை போக்குவரத்து பொலிஸார் மறித்தார்கள் என்றும்,

அருச்சுனா எம்.பிக்கு தலையில் பிரச்சினை ; தமிழில் பேசவேண்டாம்...நாடாளுமன்றில் சலசலப்பு | Arjuna Mp Has A Headache Uproar In Parliament

தமிழில்  பேசவேண்டாம் - சபாநாயகர்   

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்த போதே பொலிஸார் மறித்து விசாரணை நடத்தியதாகவும் எம்.பி அருச்சுனா தெரிவித்தார்.

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!

எனது, வாகனத்தில் விஐபி விளக்குகள் போடப்பட்டிருந்ததாக தெரிவித்து அவர்கள் என்னை மறித்தார்கள் என்று அர்ச்சுனாஎம்.பி இதன்போது சுட்டிக்காட்டினார். இந்தநிலையில், அர்ச்சுனா எம்.பி இன் உரையை இடைநிறுத்திய சபாநாயகர்,

அருச்சுனா எம்.பிக்கு தலையில் பிரச்சினை ; தமிழில் பேசவேண்டாம்...நாடாளுமன்றில் சலசலப்பு | Arjuna Mp Has A Headache Uproar In Parliament

நீங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவித்திருந்தீர்கள் எனவே தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள் என கூறினார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றிய அர்ச்சுனா,

“தன்னை அநுராதபுரம் பகுதியில் வைத்து பொலிஸார் மறித்ததாகவும், தனது அடையாள அட்டையை கேட்டதாகவும், தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் என்னுடைய அடையாள அட்டை நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

நாடாளுமன்றத்தால் தரப்பட்ட தற்காலிக அட்டை என்னிடம் உள்ளது என்று அதனைக் காட்ட முற்பட்டும் அந்த போக்குவரத்து பொலிஸார் அதனை ஏற்க மறுத்துவிட்டதாக கூறினார்.

இதனையடுத்து, குறுக்கிட்ட சபாநாயகர், அர்ச்சுனா எம்.பியைப் பார்த்து “உங்களுடைய அடையாள அட்டை நாடாளுமன்ற அலுவலகத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது.

அதனை நீங்கள் தான் பெற்றுக் கொள்ள தவறியுள்ளீர்கள் என சுட்டிக்காட்டினார். இதனையடுத்து மீண்டும் உரையாற்ற ஆரம்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா,

விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சென்னை நபர்

விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சென்னை நபர்

தான் அநுராதபுரத்தில் வைத்து இடைமறிக்கப்பட்ட பின்னர், தனக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடந்த உரையாடலை பொலிஸார் பதிவு செய்து அதனை ஊடகங்களில் வெளியிட்டதாகவும், பொலிஸாரின் இந்த செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இடையில் குறுக்கிட்ட தயாசிறி  எம்.பி

 இதன்போது, இடையில் குறுக்கிட்ட, எம்.பி தயாசிறி ஜயசேகர,

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு உரையாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது, சபையைப் பார்த்தும், சபாநாயகரைப் பார்த்தும் இவ்வாறு உரையாற்றுவதை இந்த சபை எப்படி அனுமதிக்கின்றது என்றும், இங்கு பாகுபாடு இல்லை என்றும் கடும் தொனியில் பேசினார்.

அருச்சுனா எம்.பிக்கு தலையில் பிரச்சினை ; தமிழில் பேசவேண்டாம்...நாடாளுமன்றில் சலசலப்பு | Arjuna Mp Has A Headache Uproar In Parliament

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தலையில் பிரச்சினை என்றும் தயாசிறி கூறியதை அடுத்து, உரையாற்றிய சபாநாயகர்,

நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது, எனவே அது சாதாரண மனிதர் என்றாலும், எம்.பியாக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் அவ்வாறே பின்பற்றப்படும்.

கணவனுடன் மருத்துவமனை சென்ற பெண்ணிடம் மருத்துவரின் மோசமான செயல்

கணவனுடன் மருத்துவமனை சென்ற பெண்ணிடம் மருத்துவரின் மோசமான செயல்

இதில் பாகுபாடு இல்லை என அறிவித்ததுடன், அர்ச்சுனா எம்.பி சபையில் கூறிய தகாத வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் அறிவித்தார். எவ்வாறாயினும், சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க,

இந்த உரைகளை ஹன்சாட்டில் இருந்து நீக்குவதால் பயனில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிரபல யூடியூபர் என்றும், அவர் உரையாற்றும் இந்த நேரத்திலேயே அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.


4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US