ஆளுனர் அலுவலகத்தை விட்டு வெளியேறிய அநுராதா யஹம்பத்
பதவி நீக்கம் செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் அநுராதா யஹம்பத் ஆளுநர் அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
அனுராதா யஹம்பத் நேற்று (16) தனது அலுவலகப் பணிகளை முடித்துக் கொண்டு பதவியிலிருந்து வெளியேறினார்.
புறப்படுவதற்கு முன், அனைத்து ஊழியர்களிடமும் ஆளுநர் உரையாற்றினார். இதன்போது அவர் கூறுகையில்,
மூன்றரை வருடங்களாக கிழக்கு மாகாணம் மீள தன்னால் இயன்றதைச் செய்ததாகக் கூறினார்.
இச்செயற்பாடு வெற்றியடைய உழைத்த கிழக்கு மாகாண சபையின் அனைத்து அதிகாரிகளுக்கும் ஆளுநர் அலுவலகத்திற்கும் நன்றி தெரிவிக்கவும் அவர் மறக்கவில்லை.
அதன் பின்னர் திணைக்கள அலுவலக அதிகாரிகள் ஆளுநருக்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கிய பின்னர், ஆளுநர் தனது அதிகாரப்பூர்வ காரை ஒப்படைத்துவிட்டு சொந்த காரில் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.
ஆளுநரின் பிரியாவிடையில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, முன்னாள் ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் உதித ரஸ்நாயக்க, சலுகா தினேந்திரா, மகேஷ் சதுரங்க, ருச்சிர திலான் மதுசங்க, சி. விஜேவர்தன, ஆளுநரின் உதவிச் செயலாளர் ஏ.ஜி.தேவேந்திர, கணக்காளர் ஏ.கோர்னேஷ், நிர்வாக உத்தியோகத்தர்கள், மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் திரு.சாமர நிலங்க மற்றும் பலர் கலந்துகொண்டனர்.