அனுர செய்தது சரி; போகும் முன் மஹிந்த செய்த சம்பவம்
முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் ரத்து செய்தல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார்.
தனது மனைவி ஷிரந்த ராஜபக்ஷவுடன் கொழும்பு விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து, வியாழக்கிழமை (11) வெளியேறி தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு குடிபெயர சென்றனர்.
நாங்கள் தான் தவறு செய்துவிட்டோம்
இதன்போது அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, போகச் சொன்னார்கள் போகின்றோம். ஆனால், அரசியலில் இருந்து போகமாட்டோம். அனுர செய்தது சரி, நாங்கள் தான் தவறு செய்துவிட்டோம் என கூறினாராம் .
நேற்று (10) நாடாளும்ன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார்.