இலங்கையில் மீண்டுமொரு பயங்கரம்: அடுத்தடுத்து நடக்கும் பகீர் சம்பவம்
கோகாலை பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் கேகாலை − கஹடபிட்டிய பகுதியில் இன்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் சம்பவம் குறித்து தெரியவருவது, வீட்டின் உரிமையாளர் அதிகாலையில் தேநீரை ஊற்றுவதற்காக நீரை அடுப்பில் வைத்த வேளையிலேயே இந்த சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் எவருக்கும், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும், எரிவாயு கசிவு இந்த வெடிப்புக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.