மியான்மார் பயங்கரவாதிகளிடம் சிக்கிய மேலுமொரு இலங்கையர்!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மியான்மாரில் உள்ள பயங்கரவாதிகளால் 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சிறைபிடிக்கப்பட்டுதாக தகவல் வெளியாகியிருந்தது.
சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியான்மாருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இவ்வாறு அந்நாட்டு பயங்கரவாத அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர்.
இந்த குழு மியான்மரில் உள்ள பயங்கரவாத முகாமில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டு சைபர் அடிமைகளாக பயன்படுத்தப்படுகின்றமை தெரியவந்தது.
இவ்வாறானவொரு பின்னணியில் மற்றுமொரு இலங்கையர் சைபர் அடிமை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அந்த இலங்கையர் மியான்மரில் பயங்கரவாதிகளால் அழைத்துச் செல்லப்படுவதை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
அவர் வெளியிட்ட தகவலுக்கு அமைய, மேலும் 15 பேர் கொண்ட மற்றுமொரு குழு குறித்த முகாமுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.