இலங்கையில் பால் தேநீர் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
எரிவாயு விலை குறைப்பு காரணமாக பல வகையான உணவு வகைகளின் விலைகளையும் அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தினால் குறைக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் தேநீரின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.
அண்மையில் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பால் தேயிலையின் விலையை குறைக்க அரசு தலையிட வேண்டுமென அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.