8 மாத குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று; இரத்த தானம் பெற்றதால் வந்த சோகம்!
இரத்த தானம் பெற்ற 8 மாத குழந்தைக்கு எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் அகோலா மாவட்டத்தை சேர்ந்த 8 மாத பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சமீபத்தில் அவர் இரத்த தானம் பெற்றதில் அந்த குழந்தைக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
குழந்தையின் உடல்நிலை சமீபத்தில் சரியில்லாமல் போனது. பரிசோதனையில் குழந்தைக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உள்ளூர் வைத்தியரின் அறிவுறுத்தலின் பேரில் அகோலாவில் உள்ள இரத்த வங்கியில் இருந்து அவளுக்கு இரத்தம் வழங்கப்பட்டது.
அதனை குழந்தைக்கு செலுத்தியதும் அவள் குணமடைந்தாள். ஆனால் பின்னர் அவள் அடிக்கடி நோய்வாய்பட ஆரம்பித்த நிலையில், குழந்தையை அமராவதியில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு நடத்திய பரிசோதனையில் அவளுக்கு எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதைதொடர்ந்து குழந்தைக்கு நோய் பாதிப்பு எப்படி வந்தது என கண்டறிய பெற்றோருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களுக்கு நோய் பாதிப்பு இல்லை.
இந்நிலையில் ரத்தம் ஏற்றியதன் மூலம் குழந்தைக்கு எச்.ஐ.வி. வந்தது தெரியவந்ததை அடுத்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.