தகாத முறையில் நடக்க முயன்றவரை கோடாரியால் தாக்கி கொன்ற 18 வயது யுவதி!
புத்தாண்டு தினத்தன்று தன்னை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்த முயன்ற அயலவரை, 18 வயது யுவதி ஒருவர் தற்காப்புக்காக கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் பான்டா (Banda) பகுதியில், இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருகையில்,
பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக இருந்த வேளையில், மதுபோதையில் இருந்த 45 வயதுடைய பொதுமகன் ஒருவர் குறித்த பெண்ணிடம் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

தன்னை காப்பாற்ற யுவதி தாக்குதல்
அங்கிருந்த யுவதியிடம் அத்துமீறி நடந்து கொண்டபோது, தன்னை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் அந்த அங்கிருந்த கோடாரியால் அவரைத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தின் பின்னர், யுவதி தானாகவே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி சரணடைந்துள்ளார்.
தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றியதுடன், பெண்ணை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.