அச்சத்தில் பிடியில் அம்பாறை மக்கள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதால் பிரதேச மகள் அச்சத்துடன் நடமாடுவதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை, ஒலுவில், நிந்தவூர்,மருதமுனை, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கிட்டங்கி, நாவிதன்வெளி, உள்ளிட்ட பகுதிகள் முதலைகளின் நடமாட்டம் உள்ளது.
பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சம்
அண்மித்த ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனே பயணிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அங்கு உள்ள வாவிகள் குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.