அமெரிக்காவுக்கு சென்ற பஷில் ராஜபக்ஷ
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவசர அவசரமாக அமெரிக்கா பயணம்.
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ புதன்கிழமை அதிகாலை அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவசரமாக பெற்றுக்கொள்ள வேண்டிய மருத்துவத் தேவைக்காகவே அவர் அமெரிக்கா பயணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கடந்த செப்டம்பர் மாதமும் அதேபோல கடந்த ஏப்ரல் மாதத்திலும் பஸில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தோடு அசாதாரண சூழ்நிலை காரணமாக பயணத்தை இரத்து செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .
இந்த நிலையில் இன்று அமெரிக்காவுக்குச் சென்றுள்ள பஷில் ராஜபக்ஷ, ஒருமாதம் வரை அங்கு தங்கியிருக்கவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.