குருநாகலில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த 19 வயது இளைஞன்!
குருநாகல் - பொத்துஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹவத்த எல பெம்முல்லே கெதர வீதியில் 8 ஆம் மைல் கம்புவிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெம்முல்லே கெதரயிலிருந்து கஹவத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கின்னேரிய பாலத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் வதாகட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரும், பின்புறத்தில் அமர்ந்திருந்த இளைஞரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.