நோர்வேயில் காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண தமிழரின் மேலதிக தகவல் வெளியானது !
நோர்வே நாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் கார் ஒன்றிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் நோர்வேயில் குடும்பத்துடன் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் தற்போது அவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இச் சம்பவம் கொலையா ? தற்கொலையா ? என்ற கோணத்தில் நோர்வே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவம் நோர்வே வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.