சிறை சென்ற மகிந்த சகாக்கள் மருத்துவமனையில் அனுமதி!
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்ணான்டோ ஆகியோர் வெலிக்கடை சாதாரண சிறைக்கைதிகள் அனுமதிக்கப்படும் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கும் எதிராக மேல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சிறைச்சாலை அச்சகத்தில் வேலை
அதன் பின்னர் அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டு, வைத்திய பரிசோனைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சாராண சிறைக்கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பொது வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படும் சிறைக்கைதிகளுக்கு அணிவதற்காக வழங்கப்படும், ஆடை, அவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தூங்குவதற்காக தலையணை மற்றும் விரிப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஊடக பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதன் பிரகாரம் சிறைச்சாலைக்குள் அவர்களுக்கு நேற்று முதல் வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்ணான்டோ சிறைச்சாலை அச்சகத்தில் வேலைக்கு ஈடுபடுத்தப்படுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.