குண்டுவெடிப்பால் அதிரும் ஆப்கான்; 16 பேர் பலியானதாக தகவல்
ஆப்கானின் கந்தஹாரில் மசூதியொன்றில்இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டேமியா மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
சிதறிய ஜன்னல்களையும் உடல்களையும் காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இதன்போது மூன்று வெடிப்புச்சத்தங்களை கேட்டதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பு இடம்பெற்ற வேளை மசூதியில்பெருமளவு மக்கள் காணப்பட்டதாக கூறப்படும் அதேவேளை , படுகாயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் தொடர்ந்தும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், தொடர்ச்சியாக பொதுமக்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.