புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Puttalam Sri Lankan Peoples Climate Change Weather
By Sahana Dec 02, 2025 09:15 PM GMT
Report

சீரற்ற வானிலை காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா தெரிவித்தார்.

வடக்குக்கு மீண்டும் மழையா? ; அடுத்த 48 மணி நேரத்தில் வானிலையில் ஏற்பட போகும் மாற்றம்

வடக்குக்கு மீண்டும் மழையா? ; அடுத்த 48 மணி நேரத்தில் வானிலையில் ஏற்பட போகும் மாற்றம்

இன்று மாலை வரையிலான கணக்கெடுப்பின்படி, புத்தளம் மாவட்டத்தில் 16 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 548 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்ற போதிலும், 432 கிராம சேவகர் பிரிவுகளில் 73313 குடும்பங்களைச் சேர்ந்த 271206 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புத்தளம் பிரதேச செயலகப் பிரிவிலேயே அதிக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு 21 கிராம சேவகர் பிரிவுகளில் 18219 குடும்பங்களைச் சேர்ந்த 69005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு | Affected By Floods In Puttalam Continues Increase

மேலும், மாதம்பை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 38 கிராம சேவகர் பிரிவுகளில் 1778 குடும்பங்களைச் சேர்ந்த 5925 பேரும், மஹாவெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 43 கிராம சேவகர் பிரிவுகளில் 3671 குடும்பங்களைச் சேர்ந்த 13310 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளில் 8923 குடும்பங்களைச் சேர்ந்த 31200 பேரும், வென்னப்புவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 33 கிராம சேவகர் பிரிவுகளில் 1652 குடும்பங்களைச் சேர்ந்த 6092 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னாத்தவில்லு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளில் 923 குடும்பங்களைச் சேர்ந்த 7445 பேரும், சிலாபம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 45 கிராம சேவகர் பிரிவுகளில் 12100 குடும்பங்களைச் சேர்ந்த 49500 பேரும், கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 27 கிராம சேவகர் பிரிவுகளில் 8743 குடும்பங்களைச் சேர்ந்த 28813 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனமடுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 20 கிராம சேவகர் பிரிவுகளில் 339 குடும்பங்களைச் சேர்ந்த 1126 பேரும், நவகத்தேகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 19 கிராம சேவகர் பிரிவுகளில் 307 குடும்பங்களைச் சேர்ந்த 995 பேரும், தங்கொட்டுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 38 கிராம சேவகர் பிரிவுகளில் 1838 குடும்பங்களைச் சேர்ந்த 5589 பேரும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 21 கிராம சேவகர் பிரிவுகளில் 242 குடும்பங்களைச் சேர்ந்த 760 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 20 கிராம சேவகர் பிரிவுகளில் 1060 குடும்பங்களைச் சேர்ந்த 2962 பேரும், முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 31 கிராம சேவகர் பிரிவுகளில் 7268 குடும்பங்களைச் சேர்ந்த 27834 பேரும், பல்லம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் 450 குடும்பங்களைச் சேர்ந்த 1650 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 39 கிராம சேவகர் பிரிவுகளில் 5800 குடும்பங்களைச் சேர்ந்த 19000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா கூறினார்.

புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு | Affected By Floods In Puttalam Continues Increase

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், 44 வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 735 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக புத்தளம் மாவட்டத்தில் 142 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 10558 குடும்பங்களைச் சேர்ந்த 40821 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் சொன்னார்.

இவ்வாறு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான சமைத்த உணவு, குடிநீர் மற்றும் வைத்திய சேவைகள் என்பன முப்படையினர் மற்றும் அரச திணைக்கள ஊழியர்களின் ஒத்துழைப்புடன் அந்தந்த பிரதேச செயலாளர்கள் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் மேலும் வை.ஐ.எம்.சில்வா தெரிவித்தார்.

இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய் ; மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய் ; மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு | Affected By Floods In Puttalam Continues Increase

புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு | Affected By Floods In Puttalam Continues Increase

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US