அடுத்தது யாரை கொல்ல போறீங்க? யாஷிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.(Yashika Aannand) இந்த படத்திற்கு பிறகு இவர் மேலும் சில படங்களில் நடித்து பிரபலமானார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
இதேவேளை தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓரளவுக்கு கட்சிகளிடம் பிரபலமானார். அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அந்த அளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இருப்பினும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
மேலும் யாஷிகா ஆனந்த் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஏபோதும் ஆக்டிவாக இருப்பார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருவார். மேலும் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். இதேவேளையில் சமீபத்தில் பயங்கர விபத்தொன்றில் சிக்கி தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார்.
விபத்திற்கு பிறகு தற்போது மீண்டும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா சிங்கப் பெண் போல் காணொளி வெளியிட்டுள்ள அவருக்கு ஒருபுறம் வரவேற்பு கிடைத்தாலும் மற்றொருபுறம் நெட்டிசன்கள் தவறாக பேசி வருகின்றனர். அதாவது அடுத்த டார்கெட் யாரு, யாரை கொல்ல போறீங்க? என்பது போன்ற கமெண்டுகளை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.
ஒரு உயிரை கொன்று விட்டு Comeback ஒரு குறைச்சலா என்பது போன்று பதிவையும் நெட்டிசன்கள் போட்டு வருகின்றன.
இப்படி ரசிகர்கள் விமர்சிப்பதற்கு போதைப்பழக்கம் தான் காரணம் அதை விட்டுவிட்டு படத்திலும் விளம்பரத்திலும் கவனம் செலுத்தினால் யாஷிகா இன்னும் தொட முடியாத உயரத்திற்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.