ஆசிரியரின் கவனக்குறைவால் விபத்து ; அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் மோட்டார் சைக்கிள் சாரதி
தலாவ சுனாமி சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும், காரும் மோதியதில் விபத்தில் காயமடைந்த இருவர் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் வாகனத்தை செலுத்தி வந்த ஆசிரியையும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கவலைக்கிடமான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் திசையிலிருந்து தலாவ நோக்கிச் சென்ற கார் திடீரென பிரதான வீதியில் வைத்து மீண்டும் அனுராதபுரம் நோக்கி திரும்ப முயன்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.