மிக கோபமாகக் கத்திய தளபதி விஜய்: காரணம் இது தானா?
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் பீஸ்ட் (Beast.) மேலும் இந்தத் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளதோடு அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தத் படத்தில் இருந்து இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு இந்தத் திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் மாதம் 13ம் திகதி வெளியாகும் என படக்குழுவினர் உத்தியோக பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கத்தில் விஜய் தனது 66 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இவரைப் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ் மகன், குருவி ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தது. அந்த நேரத்தில் வில்லு படத்தை விஜய் ஜேம்ஸ் பாண்ட் படம் போல் நினைத்து நடித்தார். ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, அத்தோடு அந்த படத்தை பல ரசிகர்கள் கலாய்க்கவும் ஆரம்பித்தனர்.
இதனால், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் விஜய் தன் கண்ட்ரோல் மீறி மிக கோபமாக கத்தினார். சத்தம் அதிகமாக வந்ததற்கு அவர் கத்திருந்தாலும், விஜய்க்கு வில்லு தோல்வி அந்த சமயத்தில் மிகப்பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாம்.
விஜய் அன்றிலிருந்து பத்திரிகையாளார் சந்திப்பில் முடிந்த அளவிற்கு வார்த்தையை விடாமல் இருந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.