மூவரின் உயிரை காவுகொண்ட விபத்து
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பலோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்னேல வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் கலாகபரூவ பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குளியாபிட்டிய - மாதம்பை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்துக்கு உள்ளாகியதில் குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை , கிரியுல்ல - குருணாகல் வீதியில் பேருந்து ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.