தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்தில் இருவர் பலி
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Accident
Death
By Sahana
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிக்கி, 2 பெண்கள் உயிரிழந்தனர்.
மத்தலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சிற்றூர்தி ஒன்றின் டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த சிற்றூர்தி கவிழ்ந்து, விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தின் போது சிற்றூர்தியில் 6 பேர் பயணித்துள்ளனர்.
அதில் இருவர் பலியானதுடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US