புத்தளத்தில் பாரிய விபத்து சம்பவம்: இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்!
புத்தளம் - புழுதிவயல் பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவம் நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் புத்தளம் புழுதிவயல் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துச் சம்பவம் இடம்பெற்ற வேளை, புழுதிவயல் பிரதேசத்தை நோக்கிப் பயணித்த கெப் வாகனம் ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மேதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் பயணித்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த பின்னர், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்துடன் தொடர்புடைய கெப் வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.