யாழ்.கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து: சாரதிக்கு நேர்ந்த விபரீதம்!
யாழ்.கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் இரண்டு கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் யாழ்ப்பாணம் கோப்பாய் சமிக்ஜை விளக்கு சந்தியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
சமிக்ஞை இலக்கங்கங்கள் ஒளிர்ந்து கடைசி மூன்று செக்கன்கள் முடிவடையும் நிலையில் மற்றைய பகுதிக்கு செல்வதற்காக வேகமாக பயணித்த இரண்டு கனரக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் வாகனத்தின் சாரதி ஒருவர் காயமடைந்தார்.
குறித்த சம்பவத்தில் சமிக்ஞை விளக்கு பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரும் மயிரிழையில் உயிர் தப்பியதுடன் இவற்றின் காரணமாக போக்குவரத்தும் சிறிது நேரம் தடைபட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

