யாத்திரிகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மோதுண்டு விபத்து ; 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை - மில்லகஹமுல பிரதேசத்தில் இன்று (18.02.2024) பிற்பகல் வேளையில் வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் காயமடைந்து 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிவனொளிபாதமலை யாத்திரைக்கு கம்பஹா பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும் மாத்தறை பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் கினிகத்தேனை வைத்தியசாலையில் இருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வேன் முன்னால் சென்ற லொறியை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலும் விபத்தில் வேனும் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.