நீச்சல் தடாகத்தில் குளித்து கொண்டிருந்த இளைஞன் மரணம்
ஹோட்டல் உபசாரத்தில் கலந்து கொண்ட பின்னர் நீச்சல் தடாகத்தில் குளித்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இச் சம்பவம் 12 ஆம் திகதி சனிக்கிழமை கல்கிஸை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்தச் சம்பவத்தில் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
நீரில் மூழ்கிய நிலையில் அவர் மீட்கப்பட்டு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்தபோது அவர் மதுபானம் அருந்தியிருந்தமை தெரிய வந்துள்ளது.
வைத்தியசாலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.