காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி ; துரத்தி பிடித்த கணவன்! (Video)
காதலனுடன் ஓட்ட்ம்பிடித்த மனைவியை கணவர் நடு நோட்டில் தடுத்தி நிறுத்தி சண்டையிட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த கணவன் - மனைவிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ள நிலையில் திருமணத்திற்கு முன் தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வந்த அந்த பெண், பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் வேறொரு நபரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தனது காதலனை பிரிய மனம் இல்லாத அந்த பெண் திருமணத்திற்கு பிறகும் தனது காதலை தொடர்ந்ததுடன், அடிக்கடி செல்போனில் பேசுவது, தனிமையில் சந்திப்பது என இருந்து வந்துள்ளார்.
மனைவியின் செயலால் சந்தேகம்
மனைவியின் செயலால் சந்தேகம் அடைந்த கணவன் மனைவியை கண்காணித்தபோது தான் மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ல் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கணவனை விட்டுவிட்டு தனது காதலனை கரம் பிடிக்க பறந்தார் மனைவி.
#आगरा सावधानी हटी दुर्घटना घटी ?
— Aviral Singh (@aviralsingh7777) September 12, 2022
सड़क पर ड्रामा
पति ने पीछा कर पत्नी को प्रेमी के साथ पकड़ा
सड़क पर पत्नी का पीछा करते हुए बनाया विडीओ #ViralVideo #UttarPradesh #Agra pic.twitter.com/tGgdtJm6YN
இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய கணவர், மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.மனைவியை பல இடங்களில் தேடியலைந்த போது, காதலனுடன் மனைவி அடையானம் தெரிய கூடாது என்பதற்காக கூலிங் க்ளாஸ், துப்பட்டாவல் முகத்தை முடிக்கொண்டு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்.
மின்னல் வேகத்தில் சென்ற காதலன்
அவரை அடையாளம் கண்ட அவரது கணவன் அவரை தனது பிள்ளையுடன் துரத்தியுள்ளார். இதையறிந்த காதலன் வண்டியை மின்னல் வேகத்தில் இயக்கியுள்ளார். எனினும் விடாமல் துரத்திய கணவன் ஒரு வழியாக தனது மனைவியை மடக்கி பிடித்துள்ளார்.
இந்நிலையில் மனைவியை கணவன் துரத்தி பிடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.