உயர்தர பரீட்சையில் 15 வயதிலே தோற்றி சாதித்த சிறுமி

G.C.E.(A/L) Examination G.C.E. (O/L) Examination Grade 05 Scholarship examination Education
By Sahana Jun 03, 2024 12:47 AM GMT
Report

புத்தளம் - ஆராச்சிக்கட்டுவ விஜயகடுபொத பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது 15 வயதில் கணிதப் பிரிவில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முகம் கொடுத்து 3 சித்திகளைப் பெற்றுள்ளதுடன், புத்தளம் மாவட்டத்தில் 16ஆவது இடத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

ஆராச்சிக்கட்டுவ , விஜயகடுபொத பிரதேசத்தில் வசிக்கும் மஞ்சநாயக்க முதியன்சலாகே அவீஷா நெட்சரணி மஞ்சநாயக்க எனும் 15 வயதுடைய சிறுமியே இந்த சாதனையை படைத்துள்ளார்.

நாட்டில் பல பகுதிகளில் மின் விநியோக தடை

நாட்டில் பல பகுதிகளில் மின் விநியோக தடை

 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை

பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் போதே, கல்வி கற்பதில் திறமையை வெளிப்படுத்தி வந்த அவீஷா நெட்சரணி, முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை ஆராச்சிக்கட்டுவ விஜயகட்டுபொத மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.

அந்த சிறுமி புத்தளம் வில்பாத அனுர மகா வித்தியாலயத்தில் இணைந்துகொண்டதுடன், அங்கு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி 190 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டார்.

உயர்தர பரீட்சையில் 15 வயதிலே தோற்றி சாதித்த சிறுமி | A Student Who Passed The High Level Exam Age Of 15

அதன்பின்னர் ஐந்தாம் ஆண்டு முதல் எட்டாம் ஆண்டு வரை கம்பஹா ரத்னாவளி மகா வித்தியாலயத்தில் தனது கல்வியை தொடர்ந்தார். முதலாம் ஆண்டு முதல் எட்டாம் தரம் வரை கல்வி கற்கும் போது, அவீஷா நெட்சரணி வகுப்பில் திறமையை வெளிக்காட்டி வந்துள்ளதுடன் வகுப்பில் சகல பாடங்களிலும் 90 இற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்று தொடர்ச்சியாக முதல் நிலையை பெற்றார்.

எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் போது, தனக்கு 10 ஆம், 11 ஆம் தர பாட புத்தகங்களை படிப்பதற்கு ஆசையாக உள்ளது எனவும் குறித்த புத்தகங்களை வாங்கிக் கொடுக்குமாறும் அவீஷா நெட்சரணி தமது பெற்றோர்களிடம் அடிக்கடி கூறிவந்துள்ளார்.

உயர்தர பரீட்சையில் 15 வயதிலே தோற்றி சாதித்த சிறுமி | A Student Who Passed The High Level Exam Age Of 15

சாதாரண தரப் பரீட்சை எழுத வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அவீஷா நெட்சரணி, நிச்சயமாக சிறந்த புள்ளிகளை பெறுவேன் என நம்பிக்கையும் வைத்திருந்தார்.

சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு தனக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்காவிட்டால் தான் எட்டாம் தரத்துடன் கல்வியை கைவிடப் போவதாகவும் பாடசாலைக்கு செல்லப்போவதில்லை எனவும் அந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

முல்லைத்தீவில் கடற்றொழிலில் ஈடுபட்ட நபர் நீரில் மூழ்கி பலி

முல்லைத்தீவில் கடற்றொழிலில் ஈடுபட்ட நபர் நீரில் மூழ்கி பலி

எனினும் தனது மகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, அவீஷா நெட்சரணியின் பெற்றோர்கள் மகள் படிக்கும் பாடசாலையின் அதிபர் மற்றும் வகுப்பாசிரியரை சந்தித்து மகளின் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது அவீஷா நெட்சரணி எனும் சிறுமி சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு இன்னும் வயது இருப்பதாகவும், நல்ல முறையில் கல்வி கற்று வரும் அவரது படிப்பு பாதிப்படையும் வகையில் இடமளிக்க வேண்டாம் எனவும் அந்த பாடசாலையின் அதிபர் சிறுமியின் பெற்றோர்களிடம் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து தமது மகளின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, 8ஆம் தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதே அந்த பாடசாலையில் இருந்து சட்டபூர்வமாக விலக்கியுள்ளனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை

பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வெளிவாரியாக தோற்றுவதற்கும் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் அவீஷா நெட்சரணி, இரவு, பகலாக வீட்டில் இருந்தே படித்து சாதாரண தரப் பரீட்சைக்கும் தோற்றினார். இவ்வாறு சாதாரண தரப் பரீட்சையில் 8 ஏ தர சித்திகளையும் பெற்றுக் கொண்டார்.

உயர்தர பரீட்சையில் 15 வயதிலே தோற்றி சாதித்த சிறுமி | A Student Who Passed The High Level Exam Age Of 15

க.பொ.த உயர் தரப் பரீட்சை

பின்னர் தான் க.பொ.த உயர் தரப் பரீட்சையையும் எழுத விரும்புவதாகவும் அவீஷா நெட்சரணி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். மகளின் விருப்பத்திற்கு பெற்றோர்களும் தமது முழு ஆதரவையும் தெரிவித்து, தேவையான பாடப்புத்தங்களையும் வாங்கிக் கொடுத்துள்ளனர். இணையத்தளம், யூரியூப் என்பனவற்றின் உதவியுடன் ஒரு வருடத்தில் கணித பிரிவுக்கான பாடப்பரப்பை தேடி கல்வியும் கற்றார்.

உயர்தர பரீட்சையில் 15 வயதிலே தோற்றி சாதித்த சிறுமி | A Student Who Passed The High Level Exam Age Of 15

பின்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுத தனிப்பட்ட பரீட்சார்த்திக்கான விண்ணப்பதையும் விண்ணப்பித்து, நம்பிக்கையுடன் பரீட்சையும் எழுதி மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுக் கொண்டதுடன் புத்தளம் மாவட்டத்தில் கணிதப்பிரிவில் 16 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி கைது


மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US