தந்தையால் தாக்கப்பட்ட மகன்; கொலையின் காரணம்
தந்தை ஒருவர் தனது மகனை கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இச் சம்பவம் ரிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடலுபொல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (4) அதிகாலை இக்கொலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம்
29 வயதை சேர்ந்த தனது மகன் உறங்கிக் கொண்டிருந்த போதே தந்தை கோடரியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதன் மேலதிக விசாரணைகளை ரிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.