யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு நிமிட கவனயீர்ப்பு போராட்டம்!
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் ஒரு நிமிட கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்கு முன்பாக மதியம் 1.20 மணிக்கு ஒன்றுகூடிய வங்கி ஊழியர்கள் பதாகைகளை தாங்கியிருந்ததுடன் மதியம்1.21க்கு கலைந்து சென்றனர்.
இலங்கை வங்கித் தலைவர் மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றார் சட்டம் எங்கே ? பொதுமக்கள் பணத்தை பாதுகாக்குக - இலங்கை வங்கித் தலைவரின் மோசடிகரமான கொடுக்கல் வாங்கல்களை வெளிப்படுத்துக என்பது போன்ற பதாதைகளை வங்கி ஊழியர்கள் ஏந்தியிர்தனர்.
அத்துடன் இலங்கை வங்கித் தலைவரின் மோசடிகரமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைக்காக தடயவியல் கணக்காய்வொன்றை ஆரம்பிக்குக போன்ற வாசகங்கள் பதாகைகளையும் ஊழியர்கள் தாங்கியிருந்தனர்.