சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட மர்ம பொதி
மாத்தறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட ஏனைய பொருட்களை வீசிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீதியில் இருந்து சிறைக்குள் குறித்த பொதியை வீசியதை சிறைச்சாலை அலுவலக அதிகாரிகள் பார்த்துள்ளனர்.
இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், சிம் கார்ட் ஒன்று, லைட்டர்கள் இரண்டு மற்றும் கையடக்கத் தொலைபேசி பேட்டரிகள் இரண்டும் 10 சிகரெட்டுகள் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மாத்தறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மாத்தறை சிறைச்சாலை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.