சுதந்திர தினத்தில் கொழும்பில் பதறவைத்த சம்பவம்; பறிபோன உயிர்
கொழும்பு, ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரேசன் வீதிப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆட்டுப்பட்டி தெரு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறினால் நேற்று (04) இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கொலைச் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு ஆட்டுப்பட்டி தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.