மொட்டை கைவிட்ட அரசாங்கம்; ஆடிப்போன உறுப்பினர்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சு பதவிகளுக்கு சிபாரிசு செய்யப்பட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க முடியாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உறுப்பினர்களுக்கு நோட்டீஸ்
அதோடு இது தொடர்பில் உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த அறிவிப்பிற்காக எஸ்.பி. திஸாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம். சந்திரசேன, சனத் நிஷாந்த, காமினி லொக்குகே உள்ளிட்ட சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று அரசாங்கத்தின் உயர்மட்ட அலுவலகத்திற்கு தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, தற்போதைக்கு அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க முடியாவிட்டாலும் அவர்களின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என அவர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.