யாழில் வர்த்தகர் ஒருவர் தற்கொலை
யாழை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் மீற்றர் வட்டிக் கொடுமையால் தன் உயிரை மாய்த்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இந் நபர் யாழ் நகரில் கடை ஒன்றினை நடாத்தி வந்த 37 வயதுடைய இளம் வர்த்தகரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
சம்பவம்
குறித்த நபர் தனது வர்த்தக நோக்கத்திற்காக மீற்றர் வட்டிக்கு ஒரு தொகை பணத்தினை தனி நபர் ஒருவரிடம் வாங்கியுள்ளார்.
அந்த பணத்திற்கான வட்டி அதிகரித்து திருப்பி செலுத்த வேண்டிய பணத்தொகை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது.
இந்நிலையில் குறித்த வர்த்தகர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.