கழிப்பறைக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து சிறுவன் பலி
கழிப்பறைக்காக தோண்டப்பட்ட தண்ணீர் நிரப்பப்பட்ட குழியில் விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்ததாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், திங்கட்கிழமை (29) ஆனமடுவ, வடத்த கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
வடத்த கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை ஏ.எச்.எம். சதீஸ் ஷெனுல் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது குழந்தை இந்த துரதிர்ஷ்டவசமான இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
குழந்தை வீட்டில் கழிப்பறைக்காக தோண்டப்பட்ட குழியில் குழந்தை விழுந்தபோது, பாட்டி மற்றும் குடும்பத்தினர் மீட்டு, கொட்டுகச்சிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.