போதைப்பொருள் வைத்திருந்த 19 வயதுடைய பெண் அதிரடி கைது!
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 வயதுடைய பெண்ணொருவர் இன்று காலை புத்தளம் பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கைமய புத்தளம் இபுனுபதுதா வீதியில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணுடமிருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றபட்ட ஹெரோயின் போதைப் பொருள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.